Top 5 Best Horror Films That are Actually Based on True Events in Tamil
உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு திகிலூட்டும் படத்தை எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல, ஆனால் ஹாலிவுட் திரைப்படங்களில் இத்தகைய கதைகளை கையில் எடுப்பதற்கு காரணம் திகிலூட்டும் அனுபவத்தை கொடுப்பதற்கு மட்டுமில்லாமல் அதன் உண்மைத்தன்மை புரிய வைப்பதற்கும் தான். இதை நம்மால் மறுக்க முடியாது.
அந்த வகையில் இன்று நாம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 5 திகிலூட்டக்கூடிய படங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
5.The Exorcist (1973)
சினிமா வரலாற்றிலேயே The Exorcist ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படமாக பார்க்கப்படுகிறது, மறைந்த வில்லியம் பீட்டர் ப்ளாட்டி என்ற இயக்குனரால் இயக்கப்பட்ட இந்த படம் பல பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்டுகள பல வருடங்களாக தன் வசம் வைத்துள்ளது.
சாத்தானின் பிடியில் மாட்டிக்கொண்ட ஒரு 12 வயது சிறுமியை இரண்டு Priest-களுடன் சேர்ந்து எக்ஸாரிஷம் (Exorcism) மூலம் காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு தாயின் கதை தான் The Exorcist, இந்த படம் 1971-ம் ப்ளாட்டி அவர்களால் எழுதப்பட்டு இதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த நாவலில் 11 வயது சிறுமிக்குத்தான் பேய் பிடித்திருக்கும்.
அடையாளம் தெரியாத 13 வயது பையனால் நிகழ்த்தப்பட்ட எக்ஸாரிஷம் என்ற உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் எழுத்தப்பட்டது தான் இந்த நாவல். இந்த எக்ஸாரிஷத்தை நேரில் பார்த்த 20-க்கும் மேற்பட்டவர்கள் தான் அங்கு நடந்த மோசமான சம்பவங்களுக்கு சாட்சி.
அதே நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் அன்று வாழ்க்கையின் மோசமான நாளாகவும் அமைந்தது, ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்கள் அங்கு நடந்த சம்பவங்களால் பயந்திருந்தனர். அங்கு என்ன நடந்தது என்பதை பற்றிய அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்த காரணத்தினால் தான் அந்த சம்பவத்தை பற்றி புத்தகமும் எழுத்தப்பட்டது, படமும் எடுக்கப்பட்டது.
4.The Amityville Horror (1979)
அனைவராலும் அறியப்பட்ட ஒரு அமானுஸ்யமான வழக்கு, இது நியூயார்க் நகரில் உள்ள ஒரு வீட்டை பற்றியது, நியூயார்க் நகரில் இருந்து வெறும் 50 மைல்களில் அமைந்துள்ள நீளமான நகரத்தீவுதான் அமிட்டிவில்லே.
அமிட்டிவில்லே அதிகமான டட்சு காலனி வீடுகளை கொண்ட இடம். 1970-களில் அமிட்டிவில்லேயில் நடந்த திகிலூட்டும் சம்பவங்கள் அதன் பிறகு அந்த இடத்தை அமானுஸ்யங்கள் நிறைந்த இடமாக மாற்றியுள்ளது. அங்கு நடந்த கற்பனை செய்ய முடியாத சம்பவங்கள் தான் 1977-ல் ஒரு நாவல் உருவாக்கப்பட்டதுக்கு காரணமாக அமைந்தது.
ஜெய் அன்சன் எழுதிய அமிட்டிவில் ஹாரர் ஒரு உண்மைக் கதை, இந்த புத்தகம் 112 ஓஷன் அவென்யூவில் உள்ள வீட்டைப் பற்றி பேசுகிறது, அதில் பிரபலமற்ற ரொனால்ட் டிஃபியோ ஜூனியர், அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்த கொடூரமான சம்பவங்கள் நடந்து பல வருடங்கள் கழித்து லூட்ஸ் பேமி அந்த வீட்டை வாங்கினார்கள், ஆனால் கொஞ்ச நாட்களிலேயே அந்த வீட்டில் நடந்த அமானுஸ்யமான சம்பவங்களை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர், அதனால பயந்து லூட்ஸ் பேமி அடுத்த 28-டே நாட்களில் அந்த வீட்டை முழுவதுமாக காலி செய்து சென்றுவிட்டனர்.
ஆனால் இதில் நீங்கள் ஒன்றை கவனிக்க மறந்துருப்பீர்கள், டிஃபியோ ஏன் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றார், இதற்கான பதில் பலகட்ட விசாரனைக்கு பின் தான் தெரியவந்தது, அந்த வீட்டில் ஏற்கனவே பேய் இருந்துள்ளது, அந்த பேயினால் பாதிக்கப்பட்ட டிஃபியோ அதன் தூண்டுதலால் தான் தன்னோட குடும்பத்தையே கொன்றுள்ளார். இந்த சம்பவத்தை வைத்து பல படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டுள்ளன.
Post a Comment